Powered by Blogger.

இந்தியா – Google செய்திகள்

Showing posts with label News and Science. Show all posts
Showing posts with label News and Science. Show all posts

Re: Eyes & PC

Saturday, October 2, 2010


Do U Know about 20-20-20  

Step I :-
 

After every 20 minutes of looking into the computer screen, turn your head and try to look at any object placed at least 20 feet away. This changes the focal length of your eyes, a must-do for the tired eyes.


Step II :-


Try and blink your eyes for 20 times in succession, to moisten them..


Step III :-


Time permitting of course, one should walk 20 paces after every 20 minutes of sitting in one particular posture. Helps blood circulation for the entire body.

Circulate among your friends if you care for them and their eyes. They say that your eyes r mirror of your soul, so do take care of them, they are priceless... ...


Otherwise our eye would be like this.....

Description: cid:005101cb48fc$45c99b70$5c05a8c0@AFLNET
Do remember to pass this important message to your friends.......

 

  



Read more...

Re: A Beautiful story about QURAN...!!

Sunday, August 29, 2010









Assalamu Alaikum Wa Rahmathullah.

 

              A Beautiful story about QURAN.

قصة جميلة عن القران

CAVHRZYICA538CXHCAETY608CAUL7Z0UCAYLTPBJCACL06FQCAT7PH0CCAOEMJW5CAYN6B05CA3OQM4ACAOZRZNSCAPWQG7ACAFOU4LJCA51BKV0CA6M04GCCA572N07CAKF17RUCATXIDEWCASY83R4CAMX04LD.jpg

Why do we read Quran, even if we can't understand a single Arabic word????

 
This is a beautiful story.

لماذا نقرأ القران, حتى لو لم نكن نفهم مفرداته العربية جيدا


CABM4YALCAQN7TRGCAHYDBEOCAJQCOH7CAZ1VX0PCA7UBA5MCA4NGITOCAG9N0RECAYLEXT8CANBS9U7CAE5AI46CAXNK4A2CAYIL7CACA5QS1I1CABQVEPFCA8NQI5ZCA8SLFEGCAO3D03OCAY4CI3VCA7DHBC5.jpg


An old American Muslim lived on a farm in the mountains of eastern Kentucky with his young grandson. Each morning Grandpa was up early sitting at the kitchen table reading his Quran. His grandson wanted to be just like him and tried to imitate him in every way he could.

عجوز امركي مسلم يعيش في مزرعة في جبال شرق كنتاكي مع حفيده الصغير

في كل صباح الجد يستيقظ باكرا ويجلس على طاولة المطبخ ويقرأ القران.

حفيده الصغير كان يريد ان يصبح مثل جده لهذا كان يحاول تقليدة بكل طريقة ممكنة



One day the grandson asked, "Grandpa! I try to read the Quran just like you but I don't understand it, and what I do understand I forget as soon as I close the book. What good does reading the Qur'an do?"

في أحد الايام سأل الحفيد جده قائلا (جدي! انا احاول ان اقرأ القران مثلك لكنني لم افهم كلماته,والذي افهمه انساه وسرعان ما اغلق الكتاب.ما هي الفائده المرجاة من قراءة القران.


The Grandfather quietly turned from putting coal in the stove and replied, "Take this coal basket down to the river and bring me back a basket of water.

الجد بهدوء وضع الفحم في المدفئة واجاب (خذ سلة الفحم الى النهر وأملئها بالماء)



The boy did as he was told, but all the water leaked out before he got back to the house. The grandfather laughed and said, "You'll have to move a little faster next time," and sent him back to the river with the basket to try again. This time the boy ran faster, but again the basket was empty before he returned home. Out of breath, he told his grandfather that it was impossible to carry water in a basket, and he went to get a bucket instead.

قام الولد بعمل ما طلبه منه جده,لكن كل الماء تسرب من السلة قبل ان يصل عائدا الى المنزل.ضحك الجد وقال(يجب عليك ان تكون اسرع في المرة القادمة)ثم بعثه مرة اخرى الى النهر مع السلة ليحاول مرة اخرى.في هذه المرة ركض الولد بشكل اسرع,ولكن مرة اخرى السلة فرغت قبل وصوله المنزل.كان يتنفس لاهثا.واخبر جده انه من المستحيل ان احمل الماء بهذه السلة,وذهب ليحضر دلواً بدلا من السلة.



The old man said, "I don't want a bucket of water; I want a basket of water. You're just aganot trying hard enough," and he went out the door to watch the boy try in.

الرجل العجوز قال (انا لا اريد دلوا من الماء,بل اريد سلة من الماء.انت فقط لم تحاول بجهد كاف) ثم خرج ليشاهد الولد يحاول مرة اخرى


At this point, the boy knew it was impossible, but he wanted to show his grandfather that even if he ran as fast as he could, the water would leak out before he got back to the house. The boy again dipped the basket into river and ran hard, but when he reached his grandfather the basket was again empty. Out of breath, he said, "See Grandpa, it's useless!"

"So you think it is useless?" The old man said, "Look at the basket."

في هذه الاثناء.ادرك الولد انها مهمة مستحيلة,لكنه اراد ان يثبت لجده انه حتى لو ركض بأسرع ما يستطيع ,الماء سوف يتسرب قبل ان يصل عائدا الى المنزل .فقام الولد رمى بالسلة في النهر وركض بسرعة وبجهد.ولكنه عندما وصل الى البيت وجد ان السلة فارغة مرة ثالثة.

فقال وهو يلهث, انظر جدي ........انها غير مجدية

اذن انت تظن انها غير مجدية.؟ أجاب الجد

انظر الى السلة


The boy looked at the basket and for the first time realized that the basket was different. It had been transformed from a dirty old coal basket and was now clean, inside and out.

نظر الولد الى السلة وللمرة الاولى ادرك ان السلة مختلفة.كانت سلة متسخة تنقل الفحم القديم والان اصبحت نظيفة من الداخل والخارج.


Son, that's what happens when you read the Qur'an . You might not understand or remember everything, but when you read it, you will be changed, inside and out when you read time by time . That is the work of Allah in our lives...."

بني أجابه الجد : هذا ما يحصل عندما تقرأ القران.من الممكن أن لا تفهم شيئا او تتذكر اي شيء ولكن عندما تقرأه مره بعد مره بعد مره .سوف تتغير داخليا وخارجيا.هذا عمل الله في حياتنا .


If you feel this email is worth reading, please forward to your contacts/friends. Prophet Muhammad (pbuh & his family) says: *"The one who guides to good will be rewarded equally"

اذا كنت ترى ان هذه الرسالة تستحق القراءة,ارسلها مرة اخرى لجميع اصدقائك.

قال الرسول صلى الله عليه وسلم "من دعى الى هدى فله اجره واجر من عمل به الى يوم القيامة لا تنقص من اجورهم شيئا"






--
{وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ }آل عمران104

{رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ }آل عمران8

remember me in your prayers !!
 
 

 
 
 





--
Thanks & regards.
 Rafi Doha Qatar





Read more...

News: NEW WORLDS

Wednesday, August 4, 2010


Anybody out there? 140 'Earths' found
     Nasa's Kepler space probe has found more thanjust 706 potential new planets - it may also have found five new solar systems.
       Buried in the deluge of data sent back by the probe are clear signs that at least five of the 15,000 plus stars it has studied may have two or more planets in orbit around them. Some appear similar to earth.
       Up to 140 of the newly found planets are rocky and Earth-like containing both land and water, conditions which could allow simple life forms to develop, Astronomers are keen to find out how common multi-planet systems are because these are thought most likely to create the stable conditions where earth-like life might have a chance to evolve.
       These results emerged from the first six weeks of Kepler's mission. Over the four years of Kepler's mission many more such systems may emerge. The potential extrasolar systems were among 706 candidate planets found in Kepler's first six weeks of operation.
       This alone suggests planets are common, although it is not just the number but also size distribution that is important, Nasa has selected 400 of Kepler's finds to follow up using ground-based instruments and Hubble and Spitzer space telescopes.
       "The next step after kepler will be to study the atmospheres of the planets and see if we can find ay signs of life," said Dimitar Sasselov, professor of astronomy at Harvard University who is a member of the kepler science team.

Read more...

News: World's oldest sex toy 4000 BC?

Tuesday, August 3, 2010


World's oldest sex toy carved out of bone back in 4000 BC?


Washington: If you thought sex toys were modern day product, think again an excavation in sweden has turned up what may be an ancient dildo. Carved out of antler bone, the objuct is about 4 inches long and 0.8 inches in diameter.
      "Your mind and my mind wanders away to make this interpretation about what it looks like - for you and me, it signals this erected-penis-like shape. But if that's the way the Stone Age people thought about it, I can't say," Live science quoted archacologist Gerna Gruber, of the National Heritage Board in Sweden who worked on the excavaton, as saying

       The resemblance is uncanny.
       
       Writing on his blog Aardvarchaeology, Swedish archaeologist Martin Rundkvist said: "Without doubt anyone alive at the time of its making would have seen the penile similarities just as easily as we do today."
        The "dildo" was unearthed at a Mesolithic site in Motala, Sweden, that is rich with ancient artefacts from between 4000 to 6000 BC.

Read more...

HealthIssue: SHORT CUTS

Monday, August 2, 2010


SHORT CUTS:
Fish-eaters at lower risk of age-related eye disease
  Older adults whyo eat fatty fish at least once a week may have a lower risk of serious vision loss from age-related macular degeneration, a new study suggests, The finidings.reported in the journal Ophthalmology, do not prove that eating fish cuts the risk of developing the advanced stages of age-0related macular degeneration, or AMD. But they add to evidence from previous studies showing that fish eaters tend to have lower rates of AMD than people who infrequently eat fish. they also support the theory that omega-3 fatty acids - found most abundantly in oily fish like salmon, mackerel and albacore tuna - may affect the development or progression of AMD.

Formula to predict success of IVF:
   US researches have developed a formula that can predict whether fertility treatment will succeed more accurately than using age alone, and used it to develop a commercial test. they said their test, published in the Proceeedings of the National Academy of Sciences, could save couples the agony and expense of multiple attempts to have babies using in vitro fertilization, also known as IVF. Surprisingly, w3ould have been discouraged from trying again using traditional assessments were actually likely to succeed. Pedicting the success of IVF is tricky and doctors rely heavily on a woman's age.
    

Read more...

News: A black couple has amazed as their newly born baby is a white....


White, blonde baby born to black couple baffles experts


London: A black couple has amazed newly born bay is a white, blue-eyed blonde. Doctors at the Queen Mary's Hospital in sicup told the parents that Nmachi Ihegboro is definitely not an albino. However, the child has baffled the genetics experts because neither Ben nor wife Angela has any mixed-race family history.
      Bryan Sykes, the head of Human genetics at Osford University and Britain's leading expert, called the birth 'extraordinary'. "In mixed race humans, the lighter variant of skin tone may come out in a child - and this can sometimes be startlingly diffferent to the skin of the parents," the Sunquoted Sykes as saying.
      "This might be the case where there is a lot of genetic mixing, as in Afro Caribbean populations. But in Nigeria there is little mixing," Sykes added. Sykes said both parents would have needed "some form of white ancestry" for a pale version of their genes to be passed on.
        But the researcher added. "The hair is extremely unusual. Even many blonde children don't have blonde hair like this at birth."Skin colour is believed to be determined by up to seven different genes working together.
        If a woman is of mixed race, her eggs will usually contain a mixture of genes coding for both black and white skin. similarly, a man of mixed race will have a variety of different genes in his sperm. When these eggs and sperm come together, they will create a baby of misec race.
       Sykes expert said some unknown mutation was the most likely explanation.
 

Read more...

News: COMING SOON: Any Time Movie Discs


It's Any time Movies with this 'locker'


Los Angeles: a group of media and electronics companies will soon start testing a system that will let you watch the movies you buy wherever you are, regardless of formats and other technical hurdles. Like ATMs. your account would follow you, no matter what brand of machine you use.
      The group has also come up with a name for the open standard it is creating, which it unveiled on Tuesday: UI tra violet. the open standard backed bymovie studios including Warner Bros and technology companies such as Microsoft Corp represents a challenge to proprietary formats from Apple Inc and others. those formats lock buyers of video content to limited numbers of devices, such as the iPad or Apple TV.
      Backers of th digital entertainment Content Ecosystem hope to kickstart growth of digital movie purchases,now just 4% of all sales, by feeling consumers of format concerns.
       That would mirror the way that the use of automated teller machines exploded once all bands cooperated in processing transactions, said Mitch Singer, the chief technology officer for Sony Pictures Entertainment and president of the consortium, the digital Entertainment Content Ecosystem.
       The concept is to create a digital; locker that stores to kens that are proofs of purchase of DVDs. Blu-ray discs and movie downloads, When a consumer buys a movie online or at a store, he can watch it anywhere else, including on any mobile device or TV set without the hassle of copying his personal files, The Ultra Violet brand is meant to evoke the platform's invisible presence, and transcendence across numerous devices.

Read more...

Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்





கீற்று: இலங்கை விடுதலைக்குப் பின் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கூறமுடியுமா?

1915, 1976 தாக்குதல்களுக்குப் பிறகு சிங்களத் தரப்பால், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய தாக்குதல்களாக 1990 ஜூலை வவுனியாவில் முஸ்லிம் மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளைக் கடத்தி 4 முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதைச் சொல்லலாம். 1990 ஜூலை 31ல் அனுராதபுரம் மாவட்டத்தில் உடப்பாவல சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் சிங்களர்களால் கொல்லப்பட்டு, அவர்களது சடலங்கள் கிணற்றில் வீசப்பட்டது. 1998 எலபெடகம, பன்னல ஆகிய கிராமங்கள் தாக்கப்பட்டது. வீடுகள் எரிக்கப்பட்டன; 16 பேர் அளவில் படுகாயமடைந்தனர். 2001ம் ஆண்டு மே மாதம் மாவனெல்லையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தார்கள். பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. 2002ம் ஆண்டு பேருவளை என்ற ஊரில் முஸ்லிம்களின் மீன்பிடி படகுகள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. அதே ஆண்டு கொழும்பு மருதாணையில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியை முன்னிட்டு எழுந்த மோதலில் பல முஸ்லிம்கள் காயப்படுத்தப்பட்டனர். அதற்குப் பின் கொழும்பில் இருந்த இணக்கமான சூழல் விலகி, ஒருவரையொருவர் சந்தேகமாகப் பார்க்கின்ற நிலை ஏற்பட்டது. 2003ம் ஆண்டு 'காலி'யில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில, சிங்களர்களால் எரிக்கப்பட்டன. 2007ல் தர்காநகர் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில எரிக்கப்பட்டன. வருடம் சரியாக நினைவில்லை, ஒரு அரசியல் பிரச்சினை காரணமாக பேருவிளையில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, 11 பேர் அளவில் காயப்படுத்தப்பட்டார்கள். இதைத் தவிர சின்ன சின்ன தாக்குதல்கள் சிங்களர்களால் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டது.

தமிழர்கள் தரப்பு என்று பார்த்தால், 1985ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வாழைச்சேனை பகுதியில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நடந்த முதலாவது கூட்டுப்படுகொலை. எந்த இயக்கம் செய்தது என்று தெரியவில்லை. 1986ல் மன்னார் பள்ளிவாசலில் ஈரோஸ் இயக்கம் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். 1987 மார்கழி 30ம் தேதி காத்தான்குடியில் 28 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதேமாதம் 60 முஸ்லிம் குடியிருப்புகள் காத்தான்குடி எல்லையில் எரிக்கப்பட்டன. இது புலிகள் செய்ததாக நம்பப்படுகிறது.

1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள். 1988 கார்த்திகை மாதத்தில் 42 முஸ்லிம் போலிஸார்களை மட்டும் தெரிவு செய்து, ஈ.என்.டி.எல்.ப், ஈ.டி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசிய இராணுவம் கொன்றது. 1989 டிசம்பர் 10ம் தேதி, 12 முஸ்லிம்கள் கிழக்கில் கொல்லப்பட்டனர். 1990 பிப்ரவரி 1ம் தேதி காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தைக் கொண்டு வந்து விடுதலைப்புலிகள் வீடு வீடாக சோதனை செய்து இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் என்னும் ஐயத்தில் முப்பது பேரைச் சிறை பிடித்தார்கள். அதே நாளில் கல்முனையில் நாற்பது பேரைச் சிறை பிடித்தார்கள்; முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மருதூர் கனி கடத்தப்பட்டார்.

கல்முனை சிறைப்பிடிப்பை எதிர்த்து புலிகள் அலுவலகத்தின் முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதினேழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அப்படிச் சேர்க்கப்பட்டவர்களில் ஐந்துபேரை மருத்துவமனையில் வைத்து, சுட்டுக் கொன்றார்கள்; பத்துப்பேரைச் சிறை பிடித்துச் சென்றார்கள். 1990 ஜூலை 16 மட்டக்களப்பு குறுக்கன்மடம் என்னும் இடத்தில் 68 ஹஜ் யாத்ரிகர்கள் கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 3ம் தேதி காத்தான்குடி பள்ளிவாசல்கள் இரண்டில் 126 பேரும், மஜித்புரத்தில் 7 பேரும், செம்மாந்துறையில் ஒரு தந்தையும் மகனும் கொல்லப்படுகிறார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி அம்பாறையில் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 12ம் தேதி ஏராவூரில் 116 பேர் கொல்லப்பட்டார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயப்படுகிறார்கள். இதுதவிர மேலும் பல தாக்குதல்கள் நடைபெற்றன; மேலும் பலர் கொல்லப்பட்டனர்.

யார் எதைச் செய்தாலும் அதைப் புலிகள் தாம் செய்திருப்பார்கள் என்னும் எண்ணத்தை இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்திடம் முழுமையாகத் தோற்றுவித்து விட்டது. அதற்குப் பிறகு விழுந்த பெரிய அடிதான் வடக்கிலிருந்து 1990 அக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஆகும். 1992 ஏப்ரல் 26ல் அழிஞ்சிப்பொத்தானையிலும், செப்டம்பரில் பள்ளித்திடலிலும் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

பிற்பட்ட காலங்களில் முஸ்லிம் பகுதிகளில் தனித்தனியாக கொலைகள், ஒரு சில ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், கப்பம் பறித்தல் போன்ற சில செயற்பாடுகள் நடந்தன. ஆனால் உண்மையில் புலிகளுக்கும் அச்செயல்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. புலிகள் செய்யாத கொலைகள், கொள்ளைகள் ஆகியன கூட புலிகள் அமைப்புதாம் செய்ததாகப் பட்டியல் போடப்பட்டது. உதாரணமாக 2002 காலப்பகுதியில் ஓட்டமாவடி பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வுத் துறையில் செயற்பட்ட அஸீஸ் என்பவரின் படுகொலை, புலிகளால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. போர்நிறுத்தக்காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படுத்திய செயல். ஆனால் இது முஸ்லிம்களாலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்ற கொலையாகும்.

இரண்டு தனிநபர்களின் பிரச்சனைகள் கூட இனரீதியாகப் பாதிக்கும் சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன. உதாரணமாக 2002 ஜூன் 27, 28, 29களில் வாழைச்சேனை என்ற இடத்தில் உள்ள வர்த்தக மையங்கள் புலிகளால் தாக்கப்பட்டு பொருட்கள் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்டது. கடைகள் எரிக்கப்பட்டன. 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் நடந்தது. இந்தச் சம்பவம்தான் 'இனி மாற்றவே முடியாது' என்றளவிற்கான வெறுப்பை புலிகள் மேல் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணி என்னவென்றால், மீனவ முஸ்லிம் ஒருவர் இளங்கீதன் என்ற புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரிடம் மீன்பிடி டைனமைட் உபகரணம் வாங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறார்.

புலிகள் அமைப்பு என்பது கட்டுக்கோப்பான இயக்கம். எனவே இதுபோன்ற வேலைகளைச் செய்ய முடியாது. தலைமைக்குத் தெரியாமல் சின்னவன் என்பவரோடு இணைந்து இளங்கீதன் இந்த வேலையைச் செய்கிறார். ஜூன் 25 ம் தேதி பணம் வாங்குகிறார். 26 ம் தேதி முஸ்லிம் மீனவர் சென்று டைனமைட் கேட்டபோது அவர் செங்கல்லைப் பொதி செய்து கொடுத்து, தோணியில் அழைத்துச் செல்கிறார்கள். பொதியில் இருப்பது செங்கல் என்பது மீனவருக்குத் தெரியவர விவாதம் செய்கிறார். இளங்கீதனும், சின்னவனும் அவரைக் கொன்று விடுகின்றனர்.

தமிழ்ப்பகுதியில் நடந்ததால் பழி புலிகளின்மேல் விழுகிறது. இதைப் புலிகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணையிலிருந்து தான் தப்பிக்க வேண்டி, ஒரே சாட்சியாக இருந்த சின்னவனை இளங்கீதன் கொன்று விடுகிறார். இப்போது பிரச்சினை வேறு வடிவம் பெறுகிறது. ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதற்குப் பதிலாக, ஒரு தமிழர் முஸ்லிம் தரப்பால் கொல்லப்படுகிறார் என்று திசைமாறுகிறது.

கீற்று: சிங்களர்களுடன் இணைந்து கொண்டு சில முஸ்லிம்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டதாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் அதனால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறதே! அதைப் பற்றி கூற முடியுமா?.

இதில் நிறைய விடயங்களை நாம் கதைக்க வேண்டியிருக்கிறது. புலிகள் அமைப்பில் முஸ்லிம்கள் இருந்தது போலவே பிற போராளி அமைப்புகளிலும் முஸ்லிம்கள் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இலங்கை இராணுவத்திலும் தென் மாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அதிகளவில் இருந்தார்கள். ஏனெனில் தென்மாகாண முஸ்லிம்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் இருந்த முஸ்லிம்களின் சிக்கல்களோ போர்ச்சூழலோ விளங்காது. இந்தப் போராளி அமைப்பில் இருந்து பிற போராளி அமைப்புகளுக்கு உளவு சொல்பவர்களாக இருந்தவர்களை அந்தந்தப் போராளி அமைப்புகள் காட்டிக்கொடுப்பவர்களாகப் பார்ப்பதும் பிற போராளி அமைப்புகள் சிறந்த உளவாளியாகப் பார்ப்பதும் இயல்பானது தானே! அப்படி இருந்தவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்வது சரியான நிலையாக இருக்காது. அப்படிப்பட்டவர்களை அணுகிய விதத்தில் புலிகள் பிழை விட்டுவிட்டார்கள் என்று தான் கருத இடம் உண்டு.

     காட்டுக்குப் போய் விறகு வெட்டி அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஒரு முஸ்லிம் விறகுவெட்டியைச் சிங்கள இராணுவம் பிடித்து, புலிகள் பற்றிச் சொல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினால் அவனால் என்ன செய்ய முடியும்? அவன் தான் கண்டதை இராணுவத்திடம் சொல்லிவிட்டு வந்து விடுவான். இதைக் காட்டிக்கொடுப்பாக எடுப்பது சரிதானா? அதேநேரத்தில் புலிகளின் பிரதேசங்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் இராணுவம் மிகக்கடுமையாக தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சென்ற முஸ்லிம்களிடம் சோதனை செய்தது. அதையும் தாண்டி, அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு விரோதமாக புலிகளுக்கு மண்னெண்ணய், தீப்பெட்டி, அரிசி ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பதிலுக்கு புலிகள் அவர்களது தொழில் நடவடிக்கைகளை இலகுவாகச் செய்ய சலுகைகளை வழங்கினார்கள். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்த முஸ்லிம் மக்கள் மீது இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதை வைத்து மொத்த முஸ்லிம்களும் இப்படித்தான் என்ற நிலைப்பாட்டை இராணுவம் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் தங்களுக்குச் சாதகமானவர்கள் என்று நம்பியது. இதை எப்படி எடுத்துக்கொள்வது? அத்துடன் எந்தப் பக்கமும் சாராமல், தான் உண்டு தன் பாடு உண்டு என்றிருந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருக்கத்தானே செய்தார்கள்?

     இலங்கை அரசப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள். குறிப்பாக மலேய முஸ்லிம்கள் இராணுவத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். அரசப்படை தமிழர்களைக் கைது செய்கிறது என்றால், அங்கு விசாரணை நடத்துபவர்களாக முஸ்லிம்கள்தான் இருந்தனர். இதற்கு ஒரே காரணம் அரசப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளையும் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்பதுதான். இது வெளியே எப்படி பேசப்பட்டது என்றால், முஸ்லிம்கள்தான் சிங்களவர்களின் கைக்கூலிகளாக இருந்து தமிழர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள், காட்டிக் கொடுக்கிறார்கள் என்று சாதாரண மக்கள் கூட பேசும் நிலை ஏற்பட்டது.

     கீற்று: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஊர்க்காவல் படையாக அமைந்து தமிழ்ப்போராளிகளைத் தாக்கினார்கள் என்ற கருத்து நிலவுகிறதே, அது எந்தளவுக்கு உண்மை?

     1987களின் பிற்பாடு வடக்கிலும், 1990களில் கிழக்கிலும் முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை அவ்வவ்பிரதேச முஸ்லிம்களே உறுதிப்படுத்தும் பொருட்டு, ஊர்க் காவல் படை என்ற ஒன்றை அரசு பரவலாக அமைக்கிறது. அவர்களுக்கான பயிற்சியும், ஆயுதமும் அரசினாலேயே கொடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களை தனியாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் என்று பார்க்கமுடியாது. இருப்பினும் இந்த ஊர்க்காவல் படையினர் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் சில சந்தர்ப்பங்களில் தாக்குதல்களைச் நடத்தியிருக்கிறார்கள். இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரதேசம் குறித்து இவர்களுக்கு எல்லாத் தகவல்களும் தெரியும் என்பதால், இராணுவத்தை வழிநடத்தும் பணிகளிலும் ஈடுபட்டார்கள். 1990களில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அந்தப் பகுதி இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் இராணுவத்தில் இணைந்து புலிகளுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தல்லாடி இராணுவ முகாம் பலப்படுத்தல், மன்னார் தீவுப்பகுதிகளை கைப்பற்றுதல் ஆகியவற்றில் பெரும்பங்கு வகித்தார்கள்.

இப்படி முஸ்லிம் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்துவது ஒரு புனிதப்பணியாகக் கூட முஸ்லிம் பிரதேசங்களில் பிரச்சாரம் பண்ணப்பட்டது. இந்த அடிப்படையில்தான் இந்த ஊர்க்காவல் படையினர் ஜிகாத் குழுக்கள் என்கிற பெயரால் அழைக்கப்பட்டனர். இது மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் அளவிற்குச் சென்றது. ஜெனிவாவில் அரசுக்கும் புலிகளுக்கும் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் முஸ்லிம் ஜிகாத் குழுக்கள் என்ற அம்சமே ஒரு தனி பேசுபொருளாக மாறியிருந்தது. இதை இன்றளவும் முஸ்லிம் சமூகம் உணரவில்லை. ஜிகாத் குழுக்கள் என்றாலே மூதூர் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்கள்தான் மையப்பகுதி என்ற கருத்தோட்டம் இப்போதுவரை கூறப்படுகிறது.

கீற்று: முஸ்லிம் தரப்புக்கும் ஈழப்போராட்டக் குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றுகிறார்கள். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எந்தமாதிரியான இன்னல்களை அனுபவித்தார்கள்? அவர்களுக்கு இலங்கை அரசு போதிய உதவிகள் செய்ததா?

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் 1990 அக்டோபர் 18 ஆம் தேதி முல்லைத்தீவு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார்கள், 'கிழக்கிலிருந்து ஒரு படை வரப்போகிறது. அவர்கள் முஸ்லிம் இளைஞர்களைப் பிடிக்கப்போகிறார்கள். அதனால் உங்க இளைஞர


Read more...

Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்

கீற்று: ஆனால் புலிகள் இயக்கத்திலும் நிறைய முஸ்லிம்கள் இருந்தார்கள் அல்லவா, அவர்கள் எப்படி இயங்கினார்கள்?



வடகிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் சமூக அங்கீகாரமற்றிருந்த முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் பெருவாரியாக இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் பகுதிகள் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை உள்வாங்கும் ஒரு பரந்துபட்ட வேலையை புலிகள் 1983ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செய்தார்கள். புலிகள் இயக்கத்தில் சேர்ந்த சில முஸ்லிம்கள், ஆயுதப்பயிற்சி பெற்றபின்பு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். முஸ்லிம் பகுதிகளில் இருந்த சில சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து மக்களை மிரட்டுவது, பணம் பிடுங்குவது போன்ற செயல்களில் இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டார்கள். இச்செயல்பாடுகள் சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்தன. இப்படிப்பட்ட செயல்பாடுகளால் முஸ்லிம் சமுதாயம் புலிகள் இயக்கத்தைத் தவறாகக் கருதத் தொடங்கியது. புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுத் தளத்தில் இயங்காமல் அடக்குமுறைகளை அவ்வியக்கத்தில் இருந்த முஸ்லிம்கள் செய்ததை – முஸ்லிம் மக்கள், புலிகள் இயக்கம் செய்வதாகவே புரிந்து கொண்டனர்.

புலிகள் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்குவது கிழக்கில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவில்லை. அங்கிருந்த மக்கள் புலிகளின் தவறுகளோடு அவர்களை சகித்துக்கொள்கிறார்கள். புலிகளுக்கு எதிராகப் பேசவும் இல்லை, செயல்படவும் இல்லை. எதிர்ப்பு என்பது மன அளவில் இருந்தாலும் 1990ஆம் ஆண்டுவரை யாருமே அவ்வெதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டவில்லை; ஏனெனில் அங்கிருந்த முஸ்லிம் பகுதிகளில் பெரும்பாலானவை புலிகளின் நூறுவீத ஆளுகைக்குள் இருந்தது.

ஆனால் வடக்கில் நிலைமை இதற்கு மாறாக இருந்தது. எருக்கலம்பிட்டி ஊரில் இருந்த படித்த முஸ்லிம் இளைஞர்கள்தான் இதை ஒரு பிரச்சினையாக உணர்கிறார்கள். போராளிக் குழுக்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்களின் சில தவறான அணுகுமுறைகள் இஸ்லாமிய சமய மற்றும் சமூக நலன்களுக்குப் பாதகமாக அமைகிறது என்று எண்ணுகிறார்கள். அதன்விளைவாக அனைத்து ஆயுதக்குழுக்களையும் இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஈரோசு, ஈபிடிபி, புளோட்டு, ஈபிஆர்எல்எப் ஆகிய தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தனர்; இன்னும் சொல்லப்போனால் அவர்களை எதிரிகளாகப் பார்த்த நிலைதான் இருந்தது. அந்தச் சூழலில் அரசப் படைகளின் உதவியைப் பெற்றால் மட்டும் தான் இந்த அமைப்புகளிடம் இருந்து தப்பலாம் என்னும் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் தரப்பில் இருந்த எந்தவொரு அமைச்சரும் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை.

'ஆயுதக் குழுக்களால் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச வேண்டும்' என்றும் 'தங்களுக்கு ஆயுதப் பயிற்சி தர வேண்டும்' என்றும் ஒரு காலகட்டத்தில் அமைச்சர் எம். எச். முகமதைச் சந்தித்துக் கூறுகிறார்கள். அக்கோரிக்கையை அப்போது எம். எச். முகமது மறுத்துவிடுகிறார். 'நீங்கள் இதைச் செய்ய மறுத்தால் நாங்கள் தமிழ் ஆயுதக்குழுக்களிடம் சென்று ஆயுதப் பயிற்சி பெறுவோம். அவர்கள் உங்களைக் கொல்லச் சொன்னால் அதற்கும் தயங்க மாட்டோம்' என்று கூறுகிறார்கள். அதன் பின் தான் எம். எச். முகமது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறார்.

     'அரசு எங்களுக்கு ஆயுதப் பயிற்சி தரவேண்டும்; ஆயுதங்களும் தரவேண்டும். அரசு முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யப்பட்டால் நாங்கள் இராணுவத்திற்கு ஒத்துழைப்போம். ஆனால் இராணுவம் எங்கள் மக்கள் மீது அநியாயமாக நடந்தால் அதற்கு எதிராகவும் போராடுவோம்' என்ற விடயத்தை அவர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வைக்கிறார்கள். அதற்குப் பிறகு முப்பத்து மூன்று முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக இலங்கை இராணுவம் இருநூற்றைம்பது முஸ்லிம்களுக்குப் பயிற்சி கொடுத்தது. இந்தப் ஆயுதப் பயிற்சி பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை என்றாலும் வெளியே முஸ்லிம் மக்கள், தமிழ் போராளிகளுக்கு எதிராக ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள் என்று மிகப்பெரிதாகக் கதைக்கப்பட்டது. இவர்களிடம் பெரிய ஆயுதங்கள் இல்லாதபோது, அப்படி இருப்பதாக பெரிய அளவில் கதைகளை இவர்களும், அந்தப் பிரதேசத்து முஸ்லிம் மக்களும் ஏனைய தமிழ்  ஆயுதக் குழுக்களை அச்சுறுத்தும் வகையில் கட்டிவிடுகிறார்கள்.

தொடக்கத்தில் எந்தவொரு தமிழ் ஆயுதக் குழுவும் முஸ்லிம் பகுதிகளுக்குள் நுழையக் கூடாது என்பது தான் இவர்களுடைய நோக்கமாக இருந்தது. இதற்காக ஒருகட்டத்தில் எருக்கலம்பிட்டி ஊரின் முகப்பில் முஸ்லிம் மக்கள் ஒரு சோதனைச்சாவடி அமைத்திருந்தார்கள். போராளிகளைத் தேடிப் போய் அழிக்கும் நோக்கமும் அவர்களிடம் இல்லை; அதற்குரிய வலுவும் இல்லை.

முஸ்லிம் இளைஞர்கள் இராணுவத்திடம் தஞ்சமடைவதற்கு புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களில் சிலர் செய்த தவறுகள்தான் பிரதான காரணமாகிறது. புலிகள் இயக்கம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இருந்தாலும் இத்தவறுகளை இயக்கத்தின் மேல்மட்டத்தில் இருந்த தலைவர்கள் கண்டிக்கத் தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல முடியும். முஸ்லிம் தரப்பும் இதுகுறித்து வெளிப்படையாக கதைக்கத் தயாரில்லாத நிலையில்தான் இருந்தது. இதனால் வந்த பாரியப் பின்விளைவுதான் புலிகள் மீதான எதிர்ப்பாக மாறிவிட்டது.

     'சிங்களப் படைக்கு ஆதரவாக முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்துவிட்டார்கள்' என்பது போன்று வெளியே உருவாக்கப்பட்ட தோற்றப்பாட்டைக் கண்டு ஏனைய தமிழ் விடுதலை அமைப்புகளும் அஞ்சத் தொடங்கின. 'இராணுவம் எங்கள் மக்களைக் கொடுமைப்படுத்தினால் அதற்கு எதிராகவும் நாங்கள் மாறுவோம்' என்று முஸ்லிம் குழுக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சொல்லியிருந்தது சரியாகப் பதியப்படவில்லை. இதன்பின்னர் இராணுவத்தில் இணைந்த முஸ்லிம் இளைஞர்களை வழிநடாத்தியவர்கள் தமிழ் போராளிக்குழுக்களால் இலக்கு வைத்துக் கடத்தப்படுகிறார்கள். ரம்ஸீன் என்பவர் ஈரோஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்; அமீன் என்பவர் ஈபிஎல்ஆர்எப் அமைப்பால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்; 1985ஆம் ஆண்டு பாயிஸ் என்பவரைக் குறிவைத்து வவுனியாவில் புலிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் அவரோடு பேருந்தில் இருந்த ஐம்பத்து மூன்று பேர் மாண்டுபோனார்கள். அந்த ஐம்பத்து மூன்று பேரில் தமிழ், முஸ்லிம், சிங்களப் பொதுமக்கள் இருந்தார்கள். இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம் மக்களிடம் ஈழப்போராட்டத்தையே வெறுக்கச் செய்யுமளவிற்கு எதிர்ப்புணர்வைக் கிளப்பியது. இதுதான் வடக்கு மாகாணத்தின் நிலையாக இருந்தது.

இந்திய இராணுவம் (ஐபிகேஎப்) இலங்கை வந்தபோது, 'எருக்கலம்பிட்டி இளைஞர்களை இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்கள்' எனப் பார்க்காமல் தனி ஆயுதக் குழுக்களாகத் தான் கருதியது; கைது செய்து சித்திரவதை செய்தது. அவ்வேளைகளில் இலங்கை அரச ராணுவம் கூட அவர்களைக் கைவிட்டது. அதன் பிறகு இந்திய இராணுவத்தின் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்தவரிடம் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கையளிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள். பேரினவாத சக்திகளின் – முஸ்லிம், தமிழர் பிளவை கூர்மைப்படுத்துகின்ற – திட்டமிட்ட நகர்வை இருதரப்பாருமே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். இரண்டு சமூகத்தின் அரசியல்வாதிகளுமே இதை ஒரு விடயமாகவே விளங்கிக் கொள்ளவில்லை.

கீற்று: எந்த மாதிரி என்று சொல்ல முடியுமா?

88களில் முஸ்லிம் மக்களின் மீது பரவலாக நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு கண்டுகொள்ளவேயில்லை. சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெரிய அளவில் பேசிய அளவிற்கு, முஸ்லிம்களின் மீதான எந்தத் தாக்குதலையும் பேசவில்லை. அதோடு, இழப்புகளுக்கு எந்த நிவாரணத்தையும் அரசு சரியாகச் செய்யவில்லை. சிங்களவர்கள் என்றால் பெரிய அளவில் முக்கியத்துவமும், முஸ்லிம்கள் என்றால் ஓரவஞ்சனையோடும் பார்க்கப்பட்டது.

பேரினவாத அரசு தமிழ் மக்கள் – தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இடையே நடக்கும் கொலைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும் அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். பேரினவாதத்திற்கு தமிழ் – முஸ்லிம் வேறுபாடு என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தது. அதை வெற்றிகரமாக பேரினவாதம் செய்து முடித்தது. முஸ்லிம் தரப்புத் தலைமைகளும், தமிழ்த்தரப்புத் தலைமைகளும் அதை உணர்ந்து கொள்ளவே இல்லை.



Read more...

Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்





கீற்று: அது எப்படி என்று கூறமுடியுமா?   

சிங்களர்கள் சில முஸ்லிம்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததன் தொடர்ச்சியாக நகர்ப்புறத்து வணிகம் சில முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. 70களின் தொடக்கத்தில் சிங்கள இனவாதிகள் பிரதான நகர்ப்புறங்களை தங்களது இன அடையாளத்தோடு கொண்டு வருவதற்காக மாதம்பை என்ற இடத்தின் மதிப்பை இழக்கச் செய்து, சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசமான – புதிதாக உருவாக்கப்பட்ட சில்வா டவுன் வழியாக பிரதான போக்குவரத்துகள் அனைத்தையும் மாற்றினார்கள். 76-ல் புத்தளத்திலும் இதைச் செய்தார்கள். அதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற வடமாகாணங்களுக்குப் போகும் சகல வாகனங்களும் புத்தளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் புதிதாக ஒரு சாலையை உருவாக்கி சிங்களமயப்படுத்தி அதன்வழியாக எல்லா வாகனங்களும் சென்று வருவதற்கான திட்டமிடுதலைச் செய்தனர்.

இதில் இருக்கும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்ட முஸ்லிம்கள் புத்தளத்திலுள்ள பொத்துவில்லு என்ற இடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதிக்கின்றனர். அங்கு வந்து போலீசார் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் பள்ளிவாசலிலேயே கொல்லப்படுகின்றனர். நாற்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இருநூற்றுக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்படுகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தவர் ஒரு முஸ்லிம் ஏ.எஸ்.பி. ஆனால் அது சிங்கள அரசு நடத்திய தாக்குதலாகத்தான் பார்க்கப்பட்டது.

அந்த முஸ்லிம் ஏ.எஸ்.பி. இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வேறுமாதிரியாகப் பார்க்கப்பட்டிருக்கும். சிங்களர்களும், தமிழர்களும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்றுதான் முஸ்லிம்தரப்பு பேசியிருக்கும். இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. தன்பக்கம் உள்ள நியாயத்தை மட்டுமே பார்ப்பது என்பதை முஸ்லிம்கள் பக்கம் உள்ள ஒரு பிரச்சனையாகத்தான் நான் பார்க்கிறேன்.

முஸ்லிம்கள் சிங்கள அரசோடு சேர்ந்து போராளிகளை கொலை செய்ததாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் வரும் தகவல்களையும் இந்தப் பின்னணியில் தான் பார்த்தாக வேண்டும். ஒரு சாதாரண முஸ்லிம் துப்பாக்கி எடுத்து யாரையும் கொன்று விட முடியாது. செய்தவன் சிங்கள அரசாங்கத்தின் ராணுவத்தில், போலிசில் பணிபுரிந்த முஸ்லிம். அப்படியானால் அந்தச் செயலை செய்தது அரசாங்கம் என்பதையும், செய்தவன் அரசாங்க ஊழியன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதையும் தமிழ்மக்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள். அரசபடையினர் செய்த கொலையாகப் பார்க்காமல் முஸ்லிம்கள் செய்த கொலையாகத் தான் பார்த்தார்கள்.

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இருந்த முஸ்லிம்களும், முஸ்லிம்களைக் கொன்றார்கள். ஆனால் அப்போது அவர்களை விடுதலைப் போராளிகளாகத்தான் பார்த்தார்களே தவிர முஸ்லிம் என்று யாரும் அடையாளப்படுத்தவில்லை. குறிப்பிட்ட அமைப்பைத் தான் அடையாளப்படுத்தினார்கள்.

90களுக்குப் பிறகு தான் முஸ்லிம்கள் 100 வீத ஒருமைப்பாட்டுடன் சிங்கள ராணுவத்தில் சேர்கின்றனர். நான் ஒரு முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காக கொல்லப்படுகிறேன், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்ற உணர்வுதான் அவர்களது இந்த நிலைப்பாட்டிற்கு காரணம்.

90களுக்குப் பிறகு இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் நிறைய பேர் கொல்லப்பட்டார்கள். இதை பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே செய்ததாக 'உறங்காத உண்மைகள்' என்ற பெயரில் வெளிவந்த சி.டி.யில் கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். இதை அவர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து வந்த பின்னால் சொன்னதால் நாங்கள் அதை முழுக்கவும் நம்பி விடவில்லை. அந்த கொலைகள் நடைபெறும்போது கருணாவும் எல்.டி.டி.யில் தான் இருந்தார் என்பதையும் நாங்கள் மறந்து விடவில்லை.

ஏனெனில் கிழக்கில் அப்போது கருணா தான் தளபதியாக இருந்தார். அப்படியானால் அங்கு கருணாவிற்கு கீழிருந்தவர்களை அவர்தானே கொன்றிருக்க வேண்டும்? அதைப்பற்றி பேசாமல் பிரபாகரன்தான் குற்றவாளி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எல்லாப் பழிகளும் பிரபாகரன் மீதே சுமத்தப்படுகிறது. அனைத்திற்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும், தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது போன்ற தோரணையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புலிகள் இல்லாத வெற்றிடத்தில் இதுமேலும் வலுப்பெறுகிறது. இப்படிப் பார்ப்பது தவறு; இது பிரச்சினையில் இருந்து இன்னொரு தரப்பு தப்பிக் கொள்வதற்கான உத்தியாகும். இப்படித்தான் ஒருபக்க பார்வையோடு பிரச்சனைகள் பேசப்படுகின்றன.

கீற்று: கொழும்புவில் தமிழர்கள் அதிகாரமற்று இருந்தார்கள். முஸ்லிம் மக்களும் அப்படித்தான் இருந்தார்களா? இதுபற்றி சொல்லுங்கள்?

கொழும்பு மட்டுமல்ல இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் எல்லாப் பகுதியிலும் அவர்கள் அதிகாரமற்று தான் வாழ்ந்தார்கள். விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் அதிகாரத்தில் இருந்தார்கள்.

2.

கீற்று: தமிழர்கள் தங்களுக்கு என்று போராட்ட அமைப்புகளை ஏற்படுத்தியது போல் முஸ்லிம் மக்களுக்கு என்று ஏதாவது போராட்ட அமைப்பு இருந்ததா?

1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சிங்களக் காவல்துறை முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பிறகு எஸ்.ஜே. வி. செல்வநாயகம்தான் பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை பேசினார். ஆனால் அங்கிருந்த முஸ்லிம் உறுப்பினர்களும் அதற்காகப் பேசவில்லை. 'முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்க கட்சி ஒன்றைத் தொடங்குங்கள்' என முஸ்லிம் தலைவர்களை செல்வநாயகம்தான் அறிவுறுத்தினார். இப்படியாக 1986ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதை போராட்டக்குழுக்கள் அங்கீகரிக்கவில்லை. அந்தக் கட்சிக்கு எதிரான எல்லா வேலைகளையும் புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் ஆட்களும் செய்தார்கள்; ஈரோசில், ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களும் செய்தார்கள். 1987ல் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட முடிவெடுத்த நிலையில், 'தேர்தலில் போட்டியிட்டால் மரண தண்டனை' என்று விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தினார்கள். தடையை மீறி, தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு கிழக்கில் 17 ஆசனங்களையும், ஏனைய பகுதிகளில் 12 ஆசனங்களையும் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.



Read more...

Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்





கீற்று: இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு நிலைமை எப்படி இருந்தது?

1948 சுதந்திரத்திற்குப் பிறகு, 1956ல் தனிச்சிங்கள சட்டம் வந்தபோது மொழிரீதியான பிரச்சனை கூர்மையடைகிறது. தமிழ் பேசுகிறவன் வேறு, சிங்களம் பேசுகிறவன் வேறு என்கிற பிரிவினை வந்தது. முஸ்லிம்கள் சிங்களர்கள் வாழும் பகுதியில் அவர்களோடு கலந்து வாழ்ந்தாலும் அவர்களது தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. சிங்களர் பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களது கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்ற இனத்திற்குள் அடக்கப்படவில்லை. தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவர்கள் 'தமிழர்கள்' என்றும் முஸ்லிம்கள் 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தைப் பிரயோயகம் அப்போது சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்காக முஸ்லிம் தலைவர்கள் அப்போது போராடிப் பார்த்தார்கள். அது தமிழ்த் தரப்பில் எடுபடவில்லை. உடனடியாக ஒரு முரண்பாட்டு ரீதியில் முஸ்லிம் தலைவர்கள் அதை அணுகத் தொடங்கினார்கள். முஸ்லிம்கள் பேசும் தமிழில் அதிகமான அரபுச் சொற்கள் கலந்திருந்ததால், தமிழர்கள் புரிந்துகொள்ளமுடியாதபடி, முஸ்லிம்களால் தமிழில் பேசமுடிந்தது. இதனால், மொழிரீதியாக 'நீ வேறு நான் வேறு' என்ற விடயத்தை முஸ்லிம் தலைவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். இது பிற்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அத்தோடு, முஸ்லிம் தலைவர்கள் 'சோனகர்கள்' என்னும் புதிய இனத்துவ அடையாளத்தினுள் முஸ்லிம்களை உட்படுத்தினர். எழுபதுகளின் பிற்பாடுகளில் இந்த சோனகர் என்னும் அடையாளம்கூட கொச்சைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. 'சோனி' என்கிற இழிவான உச்சரிப்புடன் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த இழிநிலையைப் போக்குவதற்கு முஸ்லிம்கள் போராடிய அதே நேரத்தில் ஒரு தமிழ் புத்திஜீவியேனும் அதைக் கண்டிக்க முன்வரவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. இவ்வாறு பயன்படுத்தவேண்டாம் என்று ஒருவராவது குரல் கொடுத்திருந்தால், இனத்துவரீதியில் ஒரு ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். இதுதவிர, சிங்களர்களும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால்தான் அழைத்தனர். அது சிங்களப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.

இலங்கை முஸ்லிம்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கவில்லை. மிகவும் பாமரத்தனமாக இருந்தார்கள். எனவே பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தோடு ஒன்றாகக் கலத்தல் போன்றவற்றை அவர்களால் பெரிதாகச் செய்ய முடியவில்லை. இலங்கை சுதந்திரப் போரட்டத்திலும் ஓரிரு தலைவர்களைத் தவிர அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்திருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை. அதை அவர்கள் தனித்துப் பார்க்கவே இல்லை.

அதே நேரத்தில் முஸ்லிம்களை இனரீதியாக பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் சிங்களப் பிரதேசத்திற்குள் சிங்கள மக்களை அண்டி வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த 87களுக்குப் பிறகுதான் வருகிறது. அதுவரைக்கும் முஸ்லிம்களின் அதிகாரம் இருந்தது – வடகிழக்கிற்கு வெளியில் – சிங்களர்களை அண்டி வாழ்ந்த முஸ்லிம்களின் கையில் தான். அதனால் அவர்கள் சிங்களர்களை எதிர்க்கும் போக்கைக் கொண்டிருக்கவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கு என்று தனிக்கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு அப்படி ஒன்று இல்லை. இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழ்கிற பிரதேசம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள். அவர்கள் எல்லா அரசியல் போராட்டங்களிலும் தமிழர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அஸ்ரப் தமிழரசுக் கட்சியின் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தோடு இணைந்து வேலை செய்தவர்தானே.

ஈழப்போராட்டம் ஆயுத வடிவத்திற்கு மாறியபின்பு, இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. இருதரப்பும் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலைமை உருவானது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயிலுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவருக்கும் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட அந்த உரையாடலில் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க வேண்டாம என இஸ்மாயில் கூற, நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று பதில் கூறுகிறார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அந்த உரையாடல் முழுவதும் இதுதொடர்பான விவாதம் தான் நடந்தது.

இதில் தவறு இருதரப்பு மீதும் இருக்கிறது. முஸ்லிம்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்வதை விரும்பவில்லை. மொழிமீது உள்ள பற்றினால் ஒரு முஸ்லிம் தன்னை தமிழர் என்று சொன்னால் அவரை விரோதியாகப் பார்க்கும் மனநிலையும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது. 

கீற்று: சிங்களப் பேரினவாதம் இந்தப் பிரிவினையை எப்படி பயன்படுத்திக் கொண்டது?

முஸ்லிம்கள் தங்களது இருப்பியல் சார்ந்த பிரச்சனைகளால், 1956களில் மொழிப்பிரச்சனை வந்தபோதும் மவுனமாகத்தான் இருந்தார்கள். பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்தபோதும் முஸ்லிம்கள் வாய்திறக்கவில்லை. தமிழ்த்தரப்பில் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை என எடுத்துக் கொண்டனர். முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

சிங்கள அரசாங்கம் முஸ்லிம்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களை வழங்கினார்கள். 1972களில் பதியுதீன் மஹ்மூத்திற்கு கல்வி அமைச்சும், 77களில் ஏ.சி.எஸ்.ஹமீதுவிற்கு வெளிநாட்டு அமைச்சும் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கூட சபாநாயகராக ஒரு முஸ்லிமே இருந்தார். போராட்டக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நபராக ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். முஸ்லிம்கள் தங்களுக்கு சாதகமான நிலைப்பாடுதான் எடுப்பார்கள் என சிங்களர்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அபிவிருத்தித் திட்டங்களில் இந்த முஸ்லிம் தலைவர்கள் மூன்று சமூகத்தவரும் திருப்தி அடையும் வகையில் செயல்பட்டார்கள்; தேசிய இனப்பிரச்சினையில் சில அடிப்படைகளைத் தவறவிட்டுவிட்டார்கள்.

கீற்று: இது மறைமுகமாக முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பியது என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆமாம். இந்த அடிப்படையில் தான் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் மேலும் முனைப்புப் பெறுகிறது. இதை மேலும் மேலும் கூர்மைப்படுத்தியது சிங்களப் பேரினவாதம் தான்.



Read more...

Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்





இலங்கை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர். கீற்று ஆறாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த 'இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்' தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கை முஸ்லிம் மக்களின் நிலை, தமிழர் – முஸ்லிம்கள், பிளவு, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எடுத்த விரிவான நேர்காணல் இது. அவரவர் தரப்பு நியாயங்களை மட்டுமே அவரவர் பேசும் நிலையில், துணிச்சலுடன் தான் சார்ந்த சமூகத்தின் தவறுகளையும், போராளிக்குழுக்கள் மற்றும் அரசின் தவறுகளையும் கதைத்துள்ளார். தமிழர் – முஸ்லிம் ஒற்றுமை குறித்தான பல புதிய திறப்புகளுக்கு இந்நேர்காணல் வழிவகுக்கும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுக்காக அவரது புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது


1.

கீற்று: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான முதல் தாக்குதல் எது?

அது பிரிட்டிஷ் காலத்தில் 1915ல் நடந்த கலவரம். மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு அமைதியாகப் போக வேண்டும் என்ற சட்டவிதி உண்டு. ஆனால் சிங்களவர்கள், பள்ளிவாசல் வழியாக 'பெர' (பறை மாதிரியான வாத்தியக்கருவி) அடித்துக் கொண்டு போனதால் பிரச்சனை ஆரம்பித்தது; பின்பு கலவரமாக மாற்றப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்திலேயே இனரீதியான வேறுபாடு ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவுதான் 1915 கலவரம்.

அந்த நேரத்தில் பிரிட்டிஷார் முஸ்லிம்களுக்கு சாதகமாகத்தான் நடந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் பக்கம் நியாயம் இருந்தது என்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. பெரும்பான்மையை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் சிங்களர்களை எதிர்த்து முஸ்லிம்கள் பக்கம் நின்றார்கள்.

பிரிட்டிஷார் இந்தக் கலவரத்திற்குக் காரணமான சிங்களர்களைக் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யச்சொல்லி பிரிட்டிஷாரிடம் கோரிக்கை வைத்தவர் ராமநாதன் என்கிற தமிழர். பிற்காலத்தில் சிங்களர்களை விடுதலை செய்யச் சொல்லி நீதிமன்ற உத்தரவு வந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். 'கொல்லப்பட்டபின்புதான் உத்தரவு கிடைத்தது' என்று, கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

ராணுவத்திற்கும் புலிகளுக்கும் நடந்த கடைசி யுத்தத்தில் இந்திய அரசின் கோரிக்கைப்படி அதாவது தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசிடம் சொல்லி அவர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் சொல்லி புலிகள் சரணடைவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்குள் சரணடைந்தவர்கள் அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்ற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த விடயத்திற்கு ராணுவத்தளபதி அளித்த பதில், அவர்கள் சரணடைய வருவது தங்களுக்குத் தெரியாது எனவும், அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னரே தனக்கு அந்தத் தகவல் கிடைத்ததாகவும் சொன்னதாக பத்திரிகைகளில் படித்தேன். இதுபோன்ற ஒரு காரணத்தைத்தான் பிரிட்டிஷார் சிங்களர்களைக் கொல்வதற்கும் பயன்படுத்தினர்.

கீற்று: இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது?

அப்போது முஸ்லிம்கள் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அந்தக் கலவரத்தில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டது, வீடுகள் உடைபட்டது தவிர உயிர்ப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்தக் கலவரம் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே நீ வேறு, நான் வேறு என்ற பிரிவை ஆழமாக ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் முஸ்லிம்களும் ஒரு தவறு செய்தனர். அவர்கள் தங்களது பிரச்சனையை தங்களது பக்கம் நின்று தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தனர். சிங்களர்களுக்காக பிரிட்டிஷ் அரசிடம் ராமனாதன் வாதாடியதை 'தமிழர்கள் தங்களுக்கு எதிரானவர்கள்' என்ற கண்ணோட்டத்தில் தவறாகப் பார்த்தனர். சிங்களர்களும் பள்ளிவாசல் முன்பு பறை அடித்ததை தவறாகப் பார்க்கவில்லை. அதேநேரத்தில் ராமனாதனை சிங்களர்கள் வீரராகப் பார்த்தனர். அதே ராமநாதனை 50க்குப் பிறகு சிங்களர்கள் எதிரியாகப் பார்த்ததும் நடந்தது.

 ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அந்தந்த இனக்குழு தங்களது பார்வையில் மட்டுமே பார்த்தனர். தங்கள் மொழிசார்ந்த, இனம்சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர். அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டும்போது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாரிடமும் இருக்கவில்லை.

கீற்று: இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு நிலைமை எப்படி இருந்தது?

1948 சுதந்திரத்திற்குப் பிறகு, 1956ல் தனிச்சிங்கள சட்டம் வந்தபோது மொழிரீதியான பிரச்சனை கூர்மையடைகிறது. தமிழ் பேசுகிறவன் வேறு, சிங்களம் பேசுகிறவன் வேறு என்கிற பிரிவினை வந்தது. முஸ்லிம்கள் சிங்களர்கள் வாழும் பகுதியில் அவர்களோடு கலந்து வாழ்ந்தாலும் அவர்களது தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. சிங்களர் பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களது கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்ற இனத்திற்குள் அடக்கப்படவில்லை. தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவர்கள் 'தமிழர்கள்' என்றும் முஸ்லிம்கள் 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தைப் பிரயோயகம் அப்போது சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்காக முஸ்லிம் தலைவர்கள் அப்போது போராடிப் பார்த்தார்கள். அது தமிழ்த் தரப்பில் எடுபடவில்லை. உடனடியாக ஒரு முரண்பாட்டு ரீதியில் முஸ்லிம் தலைவர்கள் அதை அணுகத் தொடங்கினார்கள். முஸ்லிம்கள் பேசும் தமிழில் அதிகமான அரபுச் சொற்கள் கலந்திருந்ததால், தமிழர்கள் புரிந்துகொள்ளமுடியாதபடி, முஸ்லிம்களால் தமிழில் பேசமுடிந்தது. இதனால், மொழிரீதியாக 'நீ வேறு நான் வேறு' என்ற விடயத்தை முஸ்லிம் தலைவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். இது பிற்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அத்தோடு, முஸ்லிம் தலைவர்கள் 'சோனகர்கள்' என்னும் புதிய இனத்துவ அடையாளத்தினுள் முஸ்லிம்களை உட்படுத்தினர். எழுபதுகளின் பிற்பாடுகளில் இந்த சோனகர் என்னும் அடையாளம்கூட கொச்சைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. 'சோனி' என்கிற இழிவான உச்சரிப்புடன் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த இழிநிலையைப் போக்குவதற்கு முஸ்லிம்கள் போராடிய அதே நேரத்தில் ஒரு தமிழ் புத்திஜீவியேனும் அதைக் கண்டிக்க முன்வரவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. இவ்வாறு பயன்படுத்தவேண்டாம் என்று ஒருவராவது குரல் கொடுத்திருந்தால், இனத்துவரீதியில் ஒரு ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். இதுதவிர, சிங்களர்களும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால்தான் அழைத்தனர். அது சிங்களப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.

இலங்கை முஸ்லிம்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கவில்லை. மிகவும் பாமரத்தனமாக இருந்தார்கள். எனவே பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தோடு ஒன்றாகக் கலத்தல் போன்றவற்றை அவர்களால் பெரிதாகச் செய்ய முடியவில்லை. இலங்கை சுதந்திரப் போரட்டத்திலும் ஓரிரு தலைவர்களைத் தவிர அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்திருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை. அதை அவர்கள் தனித்துப் பார்க்கவே இல்லை.

அதே நேரத்தில் முஸ்லிம்களை இனரீதியாக பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் சிங்களப் பிரதேசத்திற்குள் சிங்கள மக்களை அண்டி வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த 87களுக்குப் பிறகுதான் வருகிறது. அதுவரைக்கும் முஸ்லிம்களின் அதிகாரம் இருந்தது – வடகிழக்கிற்கு வெளியில் – சிங்களர்களை அண்டி வாழ்ந்த முஸ்லிம்களின் கையில் தான். அதனால் அவர்கள் சிங்களர்களை எதிர்க்கும் போக்கைக் கொண்டிருக்கவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கு என்று தனிக்கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு அப்படி ஒன்று இல்லை. இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழ்கிற பிரதேசம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள். அவர்கள் எல்லா அரசியல் போராட்டங்களிலும் தமிழர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அஸ்ரப் தமிழரசுக் கட்சியின் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தோடு இணைந்து வேலை செய்தவர்தானே.

ஈழப்போராட்டம் ஆயுத வடிவத்திற்கு மாறியபின்பு, இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. இருதரப்பும் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலைமை உருவானது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயிலுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவருக்கும் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட அந்த உரையாடலில் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க வேண்டாம என இஸ்மாயில் கூற, நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று பதில் கூறுகிறார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அந்த உரையாடல் முழுவதும் இதுதொடர்பான விவாதம் தான் நடந்தது.

இதில் தவறு இருதரப்பு மீதும் இருக்கிறது. முஸ்லிம்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்வதை விரும்பவில்லை. மொழிமீது உள்ள பற்றினால் ஒரு முஸ்லிம் தன்னை தமிழர் என்று சொன்னால் அவரை விரோதியாகப் பார்க்கும் மனநிலையும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது. 



Read more...

News: Secreat of Mona lisa

Sunday, August 1, 2010


French scientists crack secrets of Mona Lisa


Paris: The enigmatic smile remains a mystery, but French scientists say they have cracked a few secrets of the "Mona Lisa."

       French researchers studied seven of the Louvre Museum's Leonardo da Vinci paintings, including the "Mona Lisa", to analyze the master's use of successive ultrathin layers of paint and glaze - a technique that gave his works their dreamy quality. Specialists from the Center for Research and restorationof the Museums of France found that da Vinci painted up to 30 layers of paint on his works to meet his standards of subtlety. Added up, all the layers are less than 40 micrometers, or about half the thickness of a human hair, researcher Philippe Walter said on Friday. The technique, called "sfumato," allowed da Vinci to give outlines and contours a hazy quality and create an illusion of depthe and shadow. His use of the technique is well-known, but scientific study on it has been limited because tests often required samples from the paintings.
      The french researchers used a noninvasive technique called X-ray fluorescence spectroscopy to study the paint layers and their chemical composition.They brought their specially developed high-tech tool into the museum when it was closed and studied the portraits' faces, which are emblematic of sfumato. The project was developed in collaboration with the European Synchrotron Radiation Facility in Grenoble. The tool is so precise that "now we can find out the mix of pigments used by the artist for each coat of paint." Waller told the Associated Press. "And that's very, very important for understanding the technique."
       the analysis of the various paintings also shows da Vinci was constantly trying out new methods, Walter said, in the "Mona Lisa," da Vinci used manganese oxide in his shadings, In others, he used copper Often he used glazes, but not always. The results were published Wednesday in Angewandte Chemie International Edition , a chemistry journal. Traditions holds that the "Mona Lisa" is a painting of Lisa Cherardinl, wife of florentine merchant Francesco del Giocondo, and that da Vinci started painting it in 1503.

Read more...

News: Plants too hjave a nervous system

Friday, July 30, 2010

Plants too have a nervous system, can remember & react


London: Plants "remember" and "react" to information encrypted in light as well as transmit information about light intensity and quality from leaf to leaf, a process that is strikingly similar to the human nervous system.
      These "electro-chemical signals" are carried by cells, which act as plant "nerves". Led by Stanislaw Karpinski, from the Warsaw University of Life Sciences  in Poland, researchers used fluorescence imaging to observe the plants" response. They found light shone on to one leaf generated a response from the whole plant.
      the response, which tookthe form of light-induced chemical reactions in the leaves, continued in dark. This demonstrated, said scientists, the plant "remembered" the information encoded in light "We shone the light only on the bottom of the plant and we observed changes in the upper part," the BBC quoted Karpinske, as saying.
        We shone the light only on the bottom of the plant and we observed changes in the upper part," Karpinske said in a statement. Karpinski and his team found that when light triggered a chemical reaction in one leaf cell, it kicked off a "cascade" of events and that this was immediately signaled to the rest of the plant via a specific type of cellcalled "bundle sheath cell". Karpinski felt plants might use the information encoded in the light to stimulate protective chemical reactions and immunise themselves against pathogens.

Read more...

News: 'Pull the plug', Richard Rudd blink


A blink in time to say he's not dead

London: A blink of an eye stood between life and death of a supposedly brain-dead Brition. When doctors were about to go ahead with his family's decision to remove his life support system, he blinked to say that he was still alive.
        Richard Rudd, 43, from Kidderminster near Birmingham, never wanted to be on a life support system. But that was exactly what dept him alive since a motorcycle accident and post-surgical complications that paralysed him and damaged his brain in October 2009.
       A month later, knowling his son's wishes, Rudd's father finally gave doctors at Annebrook Hospital in Cambridge the permission to remove the life support system.
       Just as the doctors neared his bed to "pull the plug", they noticed Richard blink his eye. That was the first time he had given any response. The doctors asked him if he wished to live. He blinked thrice. meaning yes. Subsequent examinations revealed he eas not brain-dead.
      Richard's condition began to improve over the last rew months and he is now able to visually communicate and move his head. He will, however, need medical care round the clock and will also be taught to communicate using his tongue and facial muscles.
       "His doctor asked him three times if he wished treatment to continue, and each time he moved his eyes to the left, the signal for'yes' I'm glad that he's been given the chance to survive and to have a say. Having to make the decision of whether your child should live or die is almost impossible," Rudd's father, also named Richard was quoted as saying by BBC One.
 

Read more...

News: The Cloth That Listens to you

Wednesday, July 28, 2010


Now, a cloth that listens to you
MIT Scientists Fabric That Can Hear As Well As Emit Sound

 New York: Thsi could give a whole new meaning to the pharase power dressing. Scientists at the Massachusetts Institute of Technology have created a cloth that can hear and emit noise.
          The team, led by MIT professor Yoel Fink, has reached "a new milestone on the path to functional fibers: fibers that can detect and produce sound", MIT said in a statement, The development, described in the August issue of Nature Materials, transforms the usual passive nture of textiles into a virtually all singing, all-dancing version.
          According to MIT, "applications could include clothes that are themselves sensitive microphones, for capturing speech or monitoring bodily functions, and tiny filaments that could measure blood flow in capilaries or pressure in the brain."
         The less-than-one-micrometer-wide fibers could be inserted into organs or the cardiovascular system to monitor for biomarkers or blood flow, whild their ultrasound-like ability to preform acoustic sensing and carry infrared light essentially maked them tiny ultrasound imagers.
        The decade old research project aims to "develop fibers with ever more sophisticated properties, to enable fabrics that can interact with their environment" MIT said.
        The new space-age cloth, it said, can not only listen, but make sound, "You can actually hear them, these fibers," Noemie Chocat, part of the lab team, said.
         "If you connected them to a power supply and applied a sinusoidal current, then it would vibrate. And if you make it vibrate at audible requencies and put it cloe toyour ear, you could actually hear different notes or sounds coming out of it," Chocat added.
         When stretched, these strands could be used to make clothes that act as a microphone or generate electricity. The new fibers are based on a similar plastic to that used in microphones. However, the MIT researchers manipulated the fluorine content to ensure its molecules stayed lopside. That imbalance maked the plastic piezoelectric, meaning it changes shape when an electric field is applied.
         "In addition to wearable microphones and biological sensors, applications of the fibers could include loose nets that monitor the flow of water in the ocean and large-area sonar imaging systems with muc higher resolutions,"MIT said. The fibers aren't easy to make. They're produced from much larger cylinders that are "drawan" through a small aperture at higher temperatures. MIT experts manged the task using a number of techniques, including the use of an electically conducting graphite-based plastic and a strong electric field to align necessary molecules.

Read more...

Fwd: கருத்துக்களம்

Monday, July 26, 2010






 

இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.


மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது.
பல நூற்றாண்டுகளாக மூர் (மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது.

பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழக‌ங்களில் போதித்தனர். (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.)
மூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்
When the Moors Ruled in Europe


An insightful documentary into the prosperity Islam engendered in Europe during its glorious reign there.
இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.

விடியோவின்"PLAY" பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ "error occurred, try later " என்ற அறிவிப்போ
கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல்மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.

------------------
இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர்.

உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது.

ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.















This posting includes an audio/video/photo media file: Download Now

You are subscribed to email updates from www.Kahatowita.tk
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610


Read more...

News: SELF DISCOVERY - About Lesbians

Sunday, July 25, 2010


Why some women are late-blooming lesbians
'Biological Fluidity' Makes In Their 30s Swithch Sexual Orientation

       They are the late-blooming lesbians. Researchers have found that many women switch their preferences once they pass the age of 30 because of a bilogical "fluidity" in their sexual orientation that is much more common than in men.

        The phenomenon, whose discovery has taken researchers by surprise, suggests lesbianism could be more widespread than previously though. While many women could be future lesbians without knowing it, others may already have switched but be concealing their sexuality to keep their families together.
         Most textbooks assume, as with men, women's sexual preferences are partly genetic and become fixed in teens and early twenties, with relatively few changing sexutality later in life. Now studies have shown that in reality women's sexual orientation becomes more fluid as they grow older, with many developing lesbian or bisexual tendencies after the age of 30.
        Researchers believe the phenomenon of fluid sexuality is far more common in women than men. "Women have a uniquely female potential for periodic shifts in sexuality over time," said Christan Moran, of Southern Connecticut State University who has conducted a study of women who were married with families when they fell in love with other women.
        She found that, rather than being a joyful experience, many such women initially went through psychological agonies as they tried to reconcile their loyalities to their families with their emerging attraction to women.
        Historically, some women have found a way to reconcile their sexuality with social norms. Among them is author Virginia Woolf who, aged 40, began a love affair with Vita Sackville-West despite both being married, The phenomenon was also illustrated by Portia de Rossi, the actress whose marriage to Mel Metcalfe, amale filmmaker, brole up in 1999 after which she "married" the comedian Ellen DeGeneres.
 

Read more...

CRICKET CURRENT NEWS

CRICKET INFO LATEST PHOTO WIDGETS

  © Blogger template dev by Ourblogtemplates.com 2009

Back to TOP